தமிழக செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது

தினத்தந்தி

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே உள்ள மேற்கு கள்ளிப்புரம் முனியப்பன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று சூதாடி கொண்டிருந்த 4 பேரை சுற்றி வளைத்தனர். அதில் கள்ளிபுரத்தை சேர்ந்த முனுசாமி (வயது 48), மகேந்திரன் (57) ஆகியோர் பிடிபட்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 52 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.170 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான கர்ணன் (40), சரவணன் (32) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து