தமிழக செய்திகள்

பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம்; 2 பேர் போக்சோவில் கைது

ஊத்தங்கரையில் பள்ளி மாணவியை கட்டாய திருமணம் செய்த 2 பேரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

தினத்தந்தி

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அடுத்த வெங்கடதாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பர்சித் (வயது 23). இவர் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பழகியதோடு பாலியல் தொல்லை கொடுத்து கட்டாய திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஊத்தங்கரை போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் பர்சித், திருமணத்துக்கு உதவியதாக நண்பர் பேராம்பட்டு கிராமத்தை சேர்ந்த சிவா (28) ஆகிய 2 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் உடந்தையாக இருந்ததாக வெங்கடதாம்பட்டியை சேர்ந்த செந்தில் (55), சபரி (29), கார்த்திக் (23) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து