தமிழக செய்திகள்

கலை திருவிழா

துளசேந்திரபுரம் அரசு பள்ளியில் கலை திருவிழா நடந்தது

தினத்தந்தி

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் சார்பில் கலை திருவிழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, பாட்டுப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் தேர்வு செய்யப்பட்டு, வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் தெரிவித்தார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை