சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
மறுமை இல்லை
என மக்களிடையே
பகுத்தறிவு
முழங்கிய முரசு!
மடமை கொடுமை
கண்டு
கொதித்தெழுந்த
கருத்தியல் அரசு!
இளமை வளமை
என அன்னைத்தமிழை
செம்மொழியாக்கிய
தமிழர் பரிசு!
தமிழை இலக்கிய
இனிமையாக்கிய
தொல்காப்பியத்தின்
வாரிசு!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.