தமிழக செய்திகள்

ஆருத்ரா விவகாரம்... ஆர்.கே.சுரேஷுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் நிறுத்திவைப்பு

ஆர்.கே.சுரேஷ், விசாரணைக்கு ஆஜராகாததால், அவருக்கு எதிராக பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.

தினத்தந்தி

சென்னை,

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ், விசாரணைக்கு ஆஜராகாததால், அவருக்கு எதிராக பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.

இதை திரும்பப் பெற கோரி, ஆர்.கே. சுரேஷ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆருத்ரா மோசடிக்கும், தனக்கும் தொடர்பில்லை எனவும், மனைவி, குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக துபாயில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆர்.கே. சுரேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்