தமிழக செய்திகள்

அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கு - 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வங்கி கொள்ளையில் ஈடுபட்ட முருகன் உள்பட 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் கடந்த மாதம் 13-ந்தேதி சுமார் 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வங்கி ஊழியரான முருகன், அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளராக பணியாற்றிய அமல்ராஜ் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் 6 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதன்படி வங்கி கொள்ளையில் ஈடுபட்ட முருகன் உள்பட 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் அமல்ராஜ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது