தமிழக செய்திகள்

ஆறுமுகநேரி, ஆத்தூரில் குழாயில் குடிநீர் வினியோகம் தொடக்கம்

ஆறுமுகநேரி, ஆத்தூரில் குழாயில் குடிநீர் வினியோகம் திங்கட்கிழமை முதல் தொடங்கியது.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி ஆத்தூர் பகுதியில் குடிநீர் திட்டப்பகுதியில் வறட்சி நிலவியதால் கடந்த 6 நாட்களாக குழாய் மூலம் குடிநீர் வினியோகம் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு, பொன்னங்குறிச்சியிலிருந்து மேலாத்தூர் நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் குழாய் மூலம் கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை 9 மணி அளவில் ஆறுமுகநேரியில் உள்ள தெருக்குழாய்களில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. வீட்டு இணைப்புகளுக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) காலையில் இருந்து குழாய் மூலம் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டும் என்று நகர பஞ்சாயத்து துணை தலைவர் கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.

இதுபோல ஆத்தூரிலும் நேற்று பகலில் தெரு குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. மாலை முதல் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் மூலம் தண்ணீர் வினியோகம் தொடங்கியதாக, நகர பஞ்சாயத்து தலைவர் கமால்தீன் தெரிவித்தார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை