தமிழக செய்திகள்

சென்னை மாவட்ட ஆட்சியராக அருணா ஐஏஎஸ் நியமனம்

சென்னை மாவட்ட புதிய ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி அருணா நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி ஐஏஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் அச்சு மற்றும் எழுதுபொருள் துறை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த பொறுப்பில் இருந்த அருணா ஐஏஎஸ் சென்னை மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

SCROLL FOR NEXT