தமிழக செய்திகள்

கஜா புயல் நிவாரண பணிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அமைச்சர்கள் களப்பணியாற்றினர் - அமைச்சர் செல்லூர் ராஜூ

கஜா புயல் நிவாரண பணிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அமைச்சர்கள் களப்பணியாற்றினர் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியார்களிடம் கூறியதாவது:

கஜா புயல் நிவாரண பணிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அமைச்சர்கள் களப்பணியாற்றினர், அதைப்போலவே நிவாரணமும் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொடுத்துள்ளது இடைக்கால நிவாரணமே, மத்திய குழுவின் அறிக்கை சென்றடைந்த பின்புதான் முழுத்தொகையும் நமக்கு கிடைக்கும்.

திமுக கூட்டணியில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் கவலையில்லை : நாங்கள் மக்களை நம்பித்தான் அரசியலில் இருக்கிறோம். ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, டிச.5-ம் தேதி மதுரையில் அமைதி பேரணி நடைபெறும்.

திமுகவுடன் எத்தனை கட்சிகள் கூட்டணி வைத்தாலும் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. தமிழகத்தில் வெற்றிடம் உள்ளதாக ரஜினி கூறியது பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து