தமிழக செய்திகள்

போராட்டத்துக்கு பொதுமக்கள் தயாரானதால்கால்வாய் தூர்வாரும் பணி உடனடியாக தொடக்கம்

லத்தேரியில் பொதுமக்கள் போராட்டத்துக்கு தயாரானதையடுத்து கால்வாய் தூர்வாரப்பட்டது,

தினத்தந்தி

கே.வி.குப்பம்

லத்தேரியில் பொதுமக்கள் போராட்டத்துக்கு தயாரானதையடுத்து கால்வாய் தூர்வாரப்பட்டது,

கே.வி.குப்பத்த அடுத்த லத்தேரி 6-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரக்கோரி பல முறை பொதுமக்கள் முறையிட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த பிரச்சினையில் ஊராட்சி அலுவலகத்தை ஊர் மக்கள் முற்றுகையிடப் போவதாக தகவல்கள் வெளிவந்தன. இதை அறிந்ததும் ஊராட்சி செயலாளர் விஸ்வநாதன் 6-வது வார்டுக்கு விரைந்து சென்று அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கால்வாய் தூர்வார உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்படி செங்கற்கள், முரம்பு மண் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்