தமிழக செய்திகள்

தமிழக அரசின் இணை செயலாளராக இருந்த ஆஷிஷ் குமார், மத்திய அரசு பணிக்கு மாற்றம் கவர்னர் உத்தரவு

தமிழக அரசின் இணை செயலாளராக இருந்த ஆஷிஷ்குமார், மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக அரசின் இணை செயலாளராக இருந்த ஆஷிஷ்குமார், மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக தமிழக கவர்னர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத்துறை இணை செயலாளராகவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனராகவும் இருந்த ஆஷிஷ்குமார், மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

அதன்படி இணைமந்திரி அலுவலக (வடகிழக்கு பிராந்திய மேம்பாடு) சிறப்பு அதிகாரியாகவும், பிரதமர் அலுவலக (பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி) சிறப்பு அதிகாரியாகவும் பதவி வகிப்பார்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்