தமிழக செய்திகள்

சாயாவனேஸ்வரர் கோவிலில் அஷ்டமி வழிபாடு

பூம்புகார் அருகேசாயாவனேஸ்வரர் கோவிலில் அஷ்டமி வழிபாடு நடந்தது.

தினத்தந்தி

திருவெண்காடு;

பூம்புகார் அருகே பிரசித்தி பெற்ற சாயாவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் காசிக்கு இணையான கோவில்களில் ஒன்றாகும். நேற்று இந்த கோவிலில் பைரவருக்கு அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக பைரவருக்கு பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகமும், மலர் அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், அர்ச்சகர் துரை சிவாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்