சென்னை,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
அசாமில் மகத்தான மக்கள் ஆணையைப் பெற்றுள்ள பாஜகவிற்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்; இது முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட, தூய்மையான நிர்வாகத்திற்கு கிடைத்த வலுவான அங்கீகாரமாகும்.
இந்தத் தீர்க்கமான வெற்றி, அஸ்ஸாம் மக்கள் நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடமும், மற்றும் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா அவர்களிடமும் வைத்துள்ள நம்பிக்கைக்குச் சான்றாகத் திகழ்கிறது.
மற்றொரு பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பல ஆண்டுகளாக நிலவிய சீர்கெட்ட நிர்வாகத்தையும் அரசியல் வன்முறையையும் முறியடித்து, மேற்கு வங்கத்தில் ஈட்டியுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் தீர்க்கமான வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஒரு நிலையான மற்றும் வளர்ந்த மேற்கு வங்கத்தை உருவாக்கும் நமது பிரதமர் .நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையின் மீதான நம்பிக்கையையே இந்த வெற்றி பிரதிபலிக்கிறது. 'இரட்டை என்ஜின்' ஆட்சி முறையின் துணையோடு, மேற்கு வங்கம் தற்போது வளர்ச்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய விரைவுப் பாதையில் பயணித்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.