தமிழக செய்திகள்

சட்டமன்ற தேர்தல்: தனது வாக்கை பதிவு செய்தார் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்

தமிழக சட்டசபை தேர்தல் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று காலை, 9 மணியளவில், ஆழ்வார்பேட்டை, சென்னை மேல்நிலை பள்ளியில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தனது வாக்கை பதிவு செய்தார்.