தமிழக செய்திகள்

சட்டசபை கூட்டத் தொடர் செப்டம்பர் 8-ந் தேதி வரை நடைபெறும் - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

சட்டசபை கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் மரிய வில்சன், 2 மணி நேரம் 31 நிமிடங்கள் பட்ஜெட் உரை நிகழ்த்தினார்.

செப்டம்பர் 8-ந் தேதி வரை

அதனைத் தொடர்ந்து இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவடைந்தது. நாளை (வியாழக்கிழமை) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பட்ஜெட் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் ஆகியவற்றை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக, இன்று சட்டசபை கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், சட்டசபை கூட்டத் தொடரை செப்டம்பர் 8-ந் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.