தமிழக செய்திகள்

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

தினத்தந்தி

விழுப்புரம்

கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா கச்சிமைலூர் பகுதியை சேர்ந்தவர் காரல்மார்க்ஸ்(வயது 21). இவரும் அதே பகுதியை சேர்ந்த பூஜா(19) என்பவரும் கடந்த சில மாதங்களாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பூஜா குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் காரல்மார்க்சும், பூஜாவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்று அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். இதையறிந்த பூஜாவின் உறவினர்கள், காரல்மார்க்சை தொடர்புகொண்டு மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காரல்மார்க்சும், பூஜாவும் நேற்று விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்து, அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது