தமிழக செய்திகள்

ஈரோட்டில்விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்27-ந் தேதி நடக்கிறது

ஈரோட்டில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27-ந் தேதி நடைபெறுகிறது

தினத்தந்தி

ஈரோடு மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 27-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. பகல் 11.30 மணி வரை விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படும். 12.30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது பகுதி பிரச்சினை தொடர்பான கருத்துகளை தெரிவிக்கலாம். அதன்பிறகு அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இந்த தகவல் ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு