தமிழக செய்திகள்

தூத்துக்குடியில், வருகிற 17-ந் தேதிகுடிநீர் வினியோகம் நிறுத்தம்

தூத்துக்குடியில், வருகிற 17-ந் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையத்தில் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்பு கார நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வருகிற 17-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தூத்துக்குடி மாநகரில் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் தெரிவித்து உள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்