தமிழக செய்திகள்

ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து; பல லட்சம் ரூபாய் நோட்டுகள் எரிந்தன - ஓட்டலிலும் பரவியது

சென்னை புழல் அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் நோட்டுகள் எரிந்து நாசமாகின.

தினத்தந்தி

சென்னை அடுத்த புழல் சென்னை- கொல்கத்தா நெடுஞ்சாலை கேம்ப் சந்திப்பு அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. அதன் அருகே வணிக கடைகள், ஓட்டல்கள், தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

நேற்று அதிகாலை திடீரென அந்த ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் செங்குன்றம், மாதவரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அதற்குள் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய்நோட்டுகள் மற்றும் அருகில் உள்ள ஓட்டலில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்