தமிழக செய்திகள்

நெல்லையில் கிரைண்டர் ஆப் மூலம் அழைத்து பணம் பறிக்க முயற்சி: 3 பேர் கைது

நெல்லை பெருமாள்புரம் பகுதியில் சேலத்தை சேர்ந்த ஒரு நபரை, மர்ம நபர்கள் சிலர் கிரைண்டர் ஆப் மூலம் அழைத்து, மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்துள்ளனர்.

திருநெல்வேலி,

நெல்லை பெருமாள்புரம் பகுதியில் ஒரு நபரை கிரைண்டர் ஆப் மூலம் அழைத்து, மிரட்டி பணம் பறிக்க முயன்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கிரைண்டர் ஆப் மூலம் அழைத்து பணம் பறிக்க முயற்சி

திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சேலம் பகுதியை சேர்ந்த ஒரு நபரை, மர்ம நபர்கள் சிலர் Grindr (கே-Gay) செயலி மூலம் அழைத்து, மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பான புகாரின்பேரில் பெருமாள்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

3 வாலிபர்கள் கைது

அதில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பொன்னாக்குடியைச் சேர்ந்த முருகன் மகன் பூபதிராஜா (வயது 20), முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர்களான பெருமாள் மகன் அருண்(20), பாலமுருகன் மகன் விஷ்ணுசுப்பு(21) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த பைக்கை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.