சென்னை,
தென் மாவட்ட ரெயில் பயணிகளுக்கு இன்று முக்கியமான அப்டேட் ஒன்றை மதுரை கோட்ட தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.
இதன்படி திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் வளாக மறுசீரமைப்புப் பணிகள் (YARD REMODELLING WORKS) காரணமாக, ரெயில் சேவைகளில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மதுரை - நாகர்கோவில் வழித்தடத்தில் பயணிப்போர் மாற்றுப் பாதைகளுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே கட்டமைப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த திட்டமிடப்பட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தினசரி பயணிகள் மற்றும் நீண்ட தூரப் பயணிகளைப் பாதிக்கும் என்பதால் முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.