சென்னை,
திருவனந்தபுரம் மண்டலத்தில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ஜூலை மாதம் ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை எழும்பூரில் இருந்து தினமும் காலை 10.40 மணிக்கு புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜூலை 3 (இன்று) மற்றும் 10-ந் தேதிகளில், வழியில் ஒரு சில இடங்களில் நிறுத்தப்பட்டு 1 மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாக செல்லும்.
இதே ரெயில், ஜூலை 5, 7, 12, 14, ஆகஸ்டு 4 ஆகிய தேதிகளில், வழியில் 1 மணி நேரம் 50 நிமிடம் தாமதமாகவும், ஜூலை 17, 19, 21, 24, 26, 28, 31 மற்றும் ஆகஸ்டு 2 ஆகிய தேதிகளில், வழியில் 2 மணி நேரம் 15 நிடங்கள் தாமதமாகவும், ஜூலை 9-ந் தேதி, வழியில் 55 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.