தமிழக செய்திகள்

போடி அருகே ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

போடி அருகே ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

போடி அருகே குரங்கணி மலை கிராமத்தில் வசிப்பவர் பால முருகன் (38). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி லட்சுமி (35). பாலமுருகன் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் பாலமுருகன் மனைவியிடம் தகராறு செய்தார்.

அப்பாது மனைவி, 2 மகன்கள் அவரை கண்டித்தனர். இதனால் கோபித்து கொண்டு பாலமுருகன் ஆட்டோவை எடுத்து சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி அவரை தேடி சென்றார். அப்போது குரங்கணி முந்தல் சாலையில் அடகு பாறை அருகே உள்ள புளிய மரத்தில் பாலமுருகன் பிணமாக தொங்கினார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை கீழே இறக்கி போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து லட்சுமி குரங்கணி பாலீசில் புகா செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு