தமிழக செய்திகள்

படப்பையில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

படப்பையில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்தவர் லட்சுமிபதி (வயது46). ஆட்டோ டிரைவரான இவர், படப்பை ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை லட்சுமிபதி வீட்டின் கதவு மூடிய நிலையில் இருந்ததால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்துள்ளனர். படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், லட்சுமிபதி திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மணிமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து