தமிழக செய்திகள்

வேப்பூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

வேப்பூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் உயிழந்தா.

தினத்தந்தி

ராமநத்தம், 

விருத்தாசலம் அண்ணா நகரை சேர்ந்தவர் காசிம் பாஷா மகன் முகமது பாஷா (வயது 24). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று தனது ஆட்டோவில் பிரவீன்குமார் என்பவரை ஏற்றிக்கொண்டு விருத்தாசலத்தில் இருந்து கண்டபங்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தார். வேப்பூர் அடுத்த சித்தூர் துணை மின்நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென முகமது பாஷாவின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக ஓடி, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த முகமது பாஷாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முகமது பாஷா இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரவீன்குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து