தமிழக செய்திகள்

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

தென்னையில் நோய் தாக்குதல் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தினத்தந்தி

சுல்தான்பேட்டை ஒன்றியம் மலைப்பாளையம், ஜே.கிருஷ்ணாபுரம் கிராமங்களில் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் வேளாண்மை துறையின் வயல் நோக்கி பயிற்சி குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் ஒரு கிராமத்திற்கு தலா 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். வேளாண் பல்கலைக்கழக நோயியல் துறை துணை பேராசிரியர் லதா தலைமை வகித்தார். முகாமில் தென்னையில் கேரள வாடல் நோய், தஞ்சாவூர் வாடல் நோய், சாறு வடிதல், நுண்ணூட்ட பற்றாக்குறை, குருத்தலுகல் நோய் ஆகியவற்றினை தடுக்கும் முறைகள் பற்றியும், காண்டாமிருக வண்டு, சிவப்பு கூண் வண்டு தடுப்பு முறைகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்