தமிழக செய்திகள்

ஸ்ரீமுஷ்ணத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

ஸ்ரீமுஷ்ணத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

தினத்தந்தி

ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மன்றம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் தவஅமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தை சென்றடைந்தது. முன்னதாக நடந்த தொடக்க நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன் தலைமை தாங்கி, பேரணியை தொடங்கி வைத்தார்.

பேரூராட்சி உதவியாளர் ராஜசேகர் வரவேற்றார். அரசு பள்ளி தலைமை ஆசிரியர் குமரேசன், உதவி தலைமை ஆசிரியை பொன்மணி, கவுன்சிலர்கள் பன்னீர்செல்வம், ஷாஜகான், சதீஷ்குமார், ராமையன், பிலோமினாள் மலர்க்கொடி ஜேம்ஸ், வசந்தி ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சமூக ஆர்வலர்கள் ஆனந்த.வீரவேல், ஆனந்த.பார்த்திபன், ஆசிரியர் முரளி, உடற்கல்வி ஆசிரியர் மணிகண்டன், பேரூராட்சி மன்ற ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்