தமிழக செய்திகள்

பட்டாசு விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

சீர்காழியில் பட்டாசு விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் பட்டாசு விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமை தாங்கினார். சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு பேசுகையில், கடையின் உரிமம்,வெடி இருப்பு பதிவேடு ஆகியவற்றை கடை உரிமையாளர்கள் சரியாக பராமரிக்கவேண்டும், உரிமத்தில் குறிப்பிட்டுள்ள அளவில் மட்டுமே பட்டாசு வைத்திருக்கவேண்டும், எளிதில் தீ பற்றக்கூடிய எந்த பொருளையும் வைத்திருக்ககூடாது, பட்டாசு கடைகளில் வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கண்டிப்பாக காப்பீடு செய்திருக்கவேண்டும்,பழைய பட்டாசுகளை வைத்திருந்து விற்பனை செய்யக்கூடாது என்று கூறினார். இதில் சீர்காழி,தரங்கம்பாடி வட்டத்தை சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட பட்டாசு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு