தமிழக செய்திகள்

பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

திருவாரூர் ரெயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்தியாவில் உள்ள ரெயில் நிலையங்களிலும் கடந்த 1-ந்தேதி முதல் பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் கடத்தல், போதை பொருட்கள் கடத்தல் ஆகியவை குறித்து விழிப்புணாவு ஏற்படுத்த வேண்டும் என்று இந்தியன் ரெயில்வே சார்பில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மண்டல முதுநிலை கோட்ட பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவின் படி திருவாரூர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி, தலைமை காவலர்கள் சுரேஷ்குமார், உமா மற்றும் போலீசார் திருவாரூர் ரெயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது பெண்களுக்கு என்று தனியாக ரெயிலில் பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியில் ஏதேனும் ஆண் நபர் ஏறினால் உடனே ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். ஜன்னல் அருகே அமர்ந்து இருக்கும் பெண்கள் தாங்கள் அணிந்து இருக்கும் நகையை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்