தமிழக செய்திகள்

அய்யப்ப பக்தர் சாவு

தேவதானப்பட்டி அருகே கார் கவிழ்ந்ததில் அய்யப்ப பக்தர் பலியானார்.

விழுப்புரத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் கேரள மாநிலம் சபரிமலைக்கு ஒரு காரில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர். பெரியகுளம்-வத்தலக்குண்டு மெயின்ரோட்டில் தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டி என்னுமிடத்தில் அவர்கள் சென்ற கார் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆறுமுகம் (வயது 51), ராஜவேல் (35) உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்