தமிழக செய்திகள்

கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் பாலாலயம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் பாலாலயம் நடந்தது.

தினத்தந்தி

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே திருநகரி கிராமத்தில் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும்.. யோக மற்றும் ஹிரண்ய நரசிம்மர்கள் இந்த கோவிலில் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இதனையொட்டி கோவிலில் யாக பூஜை நடந்தது. பின்னர் மகா பூர்ணா குதி செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வாருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டு பாலாலயம் நடந்தது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு