தமிழக செய்திகள்

6½ டன் மக்காச்சோளம், பருத்தி விதைகள் விற்பனைக்கு தடை

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 6½ டன் மக்காச்சோளம், பருத்தி விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

தினத்தந்தி

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள 5 அரசு விதை விற்பனை நிலையங்கள் மற்றும் 29 தனியார் விதை விற்பனை நிலையங்களில் விழுப்புரம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சீனிவாசன் மற்றும் திருச்சி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் கோவிந்தராசு ஆகியோர் தலைமையில் விழுப்புரம் மற்றும் திருச்சி மாவட்டங்களின் விதை ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் விற்பனை செய்யப்படும் விதைகளின் தரத்தை ஆய்வு செய்தனர். இதில் விற்பனை உரிமம், விதை இருப்பு, கொள்முதல் செய்த விதைகளின் விவரங்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீதுகள், விதைகளின் முளைப்புதிறன், பதிவுசான்றிதழ், விதைகள் சேமிக்கப்படும் விதம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பின்னர் விதைகளின் தரத்தை உறுதி செய்ய நெல், மக்காச்சோளம் மற்றும் பருத்தி ஆகிய பயிர்களில் 53 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. ஆய்வின்போது விதை சட்ட விதிகளை மீறி பருத்தி, மக்காச்சோள விதைகளை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது. மேலும் ரூ.22 லட்சத்து 61 ஆயிரம் மதிப்புள்ள 6 டன் மக்காச்சோளம், பருத்தி விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு