தமிழக செய்திகள்

கேனில் பெட்ரோல், டீசல் விற்க தடை

கேனில் பெட்ரோல், டீசல் விற்க தடைவிதிக்கப்பட்டது.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கேன், பாட்டிலில் பெட்ரோல், டீசல் விற்க போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டையிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பை பலகையில் எழுதி ஒட்டியுள்ளனர். மேலும் வாடிக்கையாளர்கள் கண்ணில்படும் படி தாளில் எழுதி ஒட்டப்பட்டுள்ளது. இந்த திடீர் உத்தரவு தெரியாமல் சிலர் கேனில் பெட்ரோல், டீசல் நிரப்ப வந்தனர். அவர்களுக்கு உத்தரவு குறித்து தெரிவித்து கேனில் வழங்க ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.

SCROLL FOR NEXT