தமிழக செய்திகள்

வாழைத்தார் விலை உயர்வு

வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் பூவன் உள்ளிட்ட பல்வேறு வாழைகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். வாழைத்தார் விளைந்தவுடன் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், தினசரி வாழைத்தார் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ரூ.350-க்கும், ரஸ்தாலி ரூ.300-க்கும், பச்சநாடன் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி ரூ.300-க்கும், மொந்தன் ரூ.500-க்கும் வாங்கிச் சென்றனர்.

நேற்று பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.500-க்கும், ரஸ்தாலி ரூ.450-க்கும், பச்சநாடன் ரூ.450-க்கும், கற்பூரவள்ளி ரூ.400-க்கும், மொந்தன் ரூ.800-க்கும் விற்பனையானது. வரத்து குறைவால் விலை வாழைத்தார் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்