தமிழக செய்திகள்

வெற்றி பெற்றதாக வைக்கப்பட்ட பேனர் ; இந்த வேலையை யார் செய்தது என்று தெரியவில்லை அதிமுக வேட்பாளர் புலம்பல்

காங்கேயத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே, அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக வைக்கப்பட்ட பேனர், உடனடியாக அகற்றப்பட்டது

தினத்தந்தி

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் வெள்ளக்கோவில் சாமிநாதனும், அதிமுக சார்பில் ஏ.எஸ்.ராமலிங்கமும் போட்டியிட்டனர். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே, அதிமுக வேட்பாளர் ராமலிங்கம் சுமார் 13ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் பழையக்கோட்டைபுதூர் பகுதியில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அலுவலருக்கு தகவல் அளித்த நிலையில், பேனர் உடனடியாக அகற்றப்பட்டது.

இதுதொடர்பாக அதிமுக வேட்பாளர் ஏ.எஸ்.ராமலிங்கம் கூறும்போது, இந்த வேலையை யார் செய்தது என்று தெரியவில்லை. ஆர்வமிகுதியால் செய்தார்களா அல்லது என் பெயரை கெடுக்கும் நோக்கில் செய்தார்களா என்பது புரியவில்லை. கட்சிக்காரர்களிடம் விசாரித்தபோது, அவர்களும் தெரியவில்லை என்று கூறினர். திருப்பூர்மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடமும் புகார் அளிக்க இருக்கிறேன்" என கூறினார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு