தமிழக செய்திகள்

மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற பார் ஊழியர் கைது

சென்னை முகப்பேர் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற பார் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சென்னை முகப்பேர் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்கப்படுவதாக அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. தகவலின் பேரில் போலீசார் முகப்பேர் கிழக்கு, வள்ளலார் தெருவில் உள்ள டாஸ்மாக் கடை வளாகத்திற்குள் இருந்த பாரை ரகசியமாக கண்காணித்தனர். அதில் பார் ஊழியரான அன்புரோஸ் (வயது 40) என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் மது விற்றது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவரிடம் இருந்து 592 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அன்புரோசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பார் உரிமையாளர் ஜெயராமை தேடி வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு