சென்னை,
தமிழக அரசியல் களம் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பான கட்டத்தை எட்டி வரும் நிலையில், சிவி சண்முகம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தனியாக ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது , சிவி சண்முகம் தலைமையில் சுமார் 36 எம்.எல்.ஏக்கள் ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ், கரூர் எம்.எல்.ஏ எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்க இந்த ஆலோசனையா? அல்லது வேறு ஏதேனும் திட்டமா? என்று அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அதிமுக எம்.எல்.ஏக்களின் இந்த திடீர் ஆலோசனை அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது. தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்க இந்த ஆலோசனையா? அல்லது வேறு ஏதேனும் திட்டமா? என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பொறுமையாக இருங்கள் நல்லதே நடக்கும்”என்றார்.