தமிழக செய்திகள்

திருமண மண்டபம், தங்கும் விடுதி கட்ட பூமி பூஜை

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் திருமண மண்டபம், தங்கும் விடுதி கட்டுவதற்கு பூமிபூஜை நடந்தது.

தினத்தந்தி

தேனி அருகே உள்ள வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் ரூ.3 கோடியே 40 லட்சத்தில் திருமண மண்டபம் மற்றும் ரூ.1 கோடியே 16 லட்சத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகளுக்கான அடிக்கல்லை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வீரபாண்டி புதுப்பாலம் அருகே திருமண மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி, பணிகளை தொடங்கி வைத்தார். இதில் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்க தமிழ்செல்வன், வீரபாண்டி பேரூராட்சி தலைவி கீதா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் சுரேஷ், கே.என்.ஆர் கட்டுமான நிறுவன இயக்குனர்கள் நாகராஜன், அபராஜிதன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு