தமிழக செய்திகள்

சுவர் இடிந்து விழுந்து பீகார் மாநில தொழிலாளி பலி

சோழவரம் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து பீகார் மாநில தொழிலாளி பலியானார்.

தினத்தந்தி

தூசி

சோழவரம் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து பீகார் மாநில தொழிலாளி பலியானார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது லத்தீப் (வயது 25). இவர் திருவண்ணாமலை மாவட்டம் சோழவரம் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று இவர் உள்பட வடமாநிலங்களை சேர்ந்த 10 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று பழைய கட்டிடத்தின் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் முகமது லத்தீப் சிக்கிக்கொண்டார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பரிசோதித்தபோது முகமதுலத்தீப் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அதன்பேரில் தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து