தமிழக செய்திகள்

இரு தரப்பினர் மோதல்; 3 பேர் கைது

மானூர் அருகே இரு தரப்பினர் மோதல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

மானூர்:

மானூர் அருகே தென்கலம்புதூரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 29). இவர் நேற்று முன்தினம் மதுபோதையில் அப்பகுதியைச் பெண்ணை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் தனது உறவினர்களுடன் ராமகிருஷ்ணனின் வீட்டுக்கு சென்று தட்டி கேட்டார். அப்போது அந்த பெண்ணை ராமகிருஷ்ணன் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், ராமகிருஷ்ணன் வீட்டின் கதவை சேதப்படுத்தினர். இதனை தடுக்க முயன்ற ராமகிருஷ்ணனின் மாமியார் கோமதியம்மாளையும் தாக்கினர். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமகிருஷ்ணன் மற்றும் 17 வயதான 2 வாலிபர்கள் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்