தமிழக செய்திகள்

காட்டெருமை முட்டி வாலிபர் படுகாயம்

காட்டெருமை முட்டி வாலிபர் படுகாயம் அடைந்தார்.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை சேர்ந்தவர் முகமது அசாருதீன் (வயது 30) இவரும் சலாம் என்பவரும் மோட்டார் சைக்கிளில் காடபிச்சம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காட்டெருமை முட்டியதில் முகமது அசாருதீன் படுகாயம் அடைந்தார். சலாம் லேசான காயத்துடன் தப்பினார். காயம் அடைந்த இருவரும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SCROLL FOR NEXT