தமிழக செய்திகள்

தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் முகாம்

கோத்தகிரி பகுதியில் தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்து இருக்கின்றனர்.

தினத்தந்தி

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்து இருக்கின்றனர்.

காட்டெருமைகள்

கோத்தகிரி பகுதியில் காட்டெருமை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் காட்டெருமைகள் நகரின் முக்கிய சாலைகளில் நடமாடி வருவதுடன், குடியிருப்பு பகுதிகளிலும், குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களிலும் தொடர்ந்து உலா வந்த வண்ணம் உள்ளன.

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக தேயிலை தோட்டங்களில் புற்கள் அதிகம் வளர்ந்து காணப்படுகின்றன. இவற்றை மேய்வதற்காக காட்டெருமைகள் குட்டிகளுடன் வந்து தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன.

விரட்ட வேண்டும்

இந்தநிலையில் வியூஹில், காம்பாய் கடை, ஹேப்பி வேலி உள்ளிட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டிகளுடன் நடமாடி வருகின்றன. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகளும், பச்சை தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களும் பீதி அடைந்து உள்ளனர்.

இவ்வாறு உலா வரும் காட்டெருமைகளால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன்பு, அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை