தமிழக செய்திகள்

பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி

அடுத்தக்கட்டமாக ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை பனையூரில் பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றும்போது மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில் கடந்த அக்டோபர் 30-ந்தேதி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றபோது, இன்றைய தினத்திற்கு(4-ந்தேதி) விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி இன்று மீண்டும் விசாரணை நடைபெற்ற நிலையில், அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அடுத்தக்கட்டமாக சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்