தமிழக செய்திகள்

சனாதனம் குறித்து மாணவர்களிடையே திமுக நஞ்சை ஊட்டுகிறது - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

சனாதனம் குறித்து மாணவர்களிடையே திமுக அரசு நஞ்சை ஊட்டுகிறது என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு சனாதன எதிர்ப்பு குறித்து மாணவர்கள் கருத்து கூற திருவாரூர் அரசு கல்லூரி முதல்வர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். கல்லூரி முதல்வரின் இந்த சுற்றறிக்கை அரசியல் அமைப்புக்கு எதிரானது இல்லையா? என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் (எக்ஸ்) பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் திருவாரூர் அரசு கலைக்கல்லூரி, மாணவ, மாணவியர் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்டு "சனாதன எதிர்ப்பு" குறித்த கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டு கொண்டுள்ளது.

திமுக அரசு மாணவர்களின் மனதில் நஞ்சை ஊட்டுகிறது. இது அரசியல் அமைப்புக்கு எதிரானது இல்லையா??" என்று தெரிவித்து உள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து