தமிழக செய்திகள்

களைகட்டிய கொடைக்கானல் படகு சவாரி

கோடை வெப்பத்தைத் தணிக்க நெல்லை மாவட்டம் அகஸ்தியர் அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து நீராடி மகிழ்ந்தனர்.

நீலகிரி,

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தரைப்பகுதிகளில் நிலவும் வெப்பத்தை சமாளிக்கவும். குளு குளு சீசன் தொடங்கிய நிலையில் 'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதனால் நேற்று காலை முதல் அவர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் எங்கு பார்த்தால் மக்களின் தலையாகவே இருந்தது.

இதனால் சீனிவாசபுரம், உகார்த்தேநகர், மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, பாம்பார்புரம் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலையிலும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்தபடி சென்றன.

இதனால் பல்வேறு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டதால் கொடைக்கானல் நகரமே திக்குமுக்காடி போனது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பாதிப்பு அடைந்தனர்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் பகல் நேரத்தில் 21 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவியது. பின்னர் பிற்பகல் முதல் அதிகாலை வரை லேசான காற்றுடன் கூடிய இதமான குளிரும் நிலவி வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர். மேலும் வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்கள் மற்றும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், பூங்காவில் பூத்துள்ள பூக்களைக் கண்டும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். உதகை, கொடைக்கானலில் இதமான காலநிலையில் படகு, குதிரை சவாரி செய்து உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

கோடை வெப்பத்தைத் தணிக்க நெல்லை மாவட்டம் அகஸ்தியர் அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து நீராடி மகிழ்ந்தனர்.