தமிழக செய்திகள்

ராமேசுவரத்தில் வீசிய பலத்த சூறாவளி காற்றால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம்...!

ராமேசுவரத்தில் நேற்று வீசிய பலத்த சூறாவளி காற்றால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தது.

தினத்தந்தி

ராமேஸ்வரம்,

ராமேசுவரத்தில் நேற்று நள்ளிரவு வீசிய பலத்த சூறாவளி காற்றால் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூர கயிறுகள் அறுந்து ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்துள்ளன.

இதில் 3 படகுகள் அதிக அளவில் சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று காலை மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் படகுகளில் தயாரான நிலையில் சேதமான படகை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் அதிகமான படகுகள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்