தமிழக செய்திகள்

கலவையில் குத்துச்சண்டை போட்டி

கலவையில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

தினத்தந்தி

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் வாழைப்பந்தல் சாலையில் உள்ள குத்துச்சண்டை பயிற்சி பள்ளியில் 80 மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இதில் பயிற்சி பெற்ற குத்துச்சண்டை வீரர்கள் சமீபத்தில் பஞ்சாப், அரியானா போன்ற இடங்களில் நடந்த போட்டியில் கலந்துகொண்டனர். மேலும் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தன்று வாலாஜா மேல்நிலைப்பள்ளியில் குத்துச்சண்டை போட்டி நடைபெற உள்ளது

அதை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று கலவையில் குத்துச்சண்டை போட்டியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அப்போது அப்துல் அக்கீம் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ராஜா, பயிற்சி மாஸ்டர் கிருஷ்ணன், ரகு, கலவை தாசில்தார் ஷமீம், வருவாய் ஆய்வாளர் வீரராகவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்