திருவிடைமருதூர்:
கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் பிரசாந்த் (வயது27). இவர் 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் நாச்சியார்கோவில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.