தமிழக செய்திகள்

ஊரப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை திருட்டு

ஊரப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை திருடப்பட்டது.

தினத்தந்தி

வீட்டின் பூட்டு உடைப்பு

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் கணபதி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் சரவணன் (வயது 52). இவர் கடந்த 21-ந்தேதி வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்தினருடன் செங்கல்பட்டு அருகே உள்ள லத்தூர் கிராமத்திற்கு சென்றார்.

பின்னர் மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நகை திருட்டு

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 28 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசுகள் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசில் சரவணன் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை