தமிழக செய்திகள்

மீஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு

மீஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

தினத்தந்தி

மீஞ்சூர் அருகே நாலூர் இந்துஜா நகரில் வசிப்பவர் ஷேக் அப்துல்லா (வயது 40). இவர் மணலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவரது தாய் திருவள்ளூர் மணவாள நகரில் மரணமடைந்த நிலையில் அவரது 16 நாள் காரியத்திற்கு தன்னுடைய குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

காரியம் முடிந்த பின்னர் நேற்று மாலை வீட்டுக்கு வந்த போது வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகை, ரூ.15 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்